Wednesday, 28 September 2022

தாத்தாவே ஆத்தாவே உனக்காக...



தாத்தாவே ஆத்தாவே உனக்காக...

காத்தால எந்திரிச்சு காடுகரை சுத்திவந்து
பாத்தாலே உன்னோட பாசமெல்லாம் கண்ணுக்குள்ள
கீத்தாகப் பரவிடுதே குளிர்நிலவா நெறைஞ்சிடுதே
ஆத்தாளப் பெத்தெடுத்த அரும மவராணி

வாய்க்கா வரப்புல வழிந்தோடும் தண்ணீரும்
காய்க்கா மரங்கூட கனிந்தோடும் அதிசயமும்
மேய்க்கா நிலையிலுமே மாடுதரும் செல்வமுமே
அய்யா நீஇல்லாம அரக்காசு ஈட்டலயே

பள்ளிக்கூடம் போகுமுன்னே பக்குவமாப் பாத்தனுப்பி
தள்ளிக்கூட நடக்காமத் தாங்குவியே என்ஆத்தா
வள்ளியோட திருமணத்த வகையாக நான்பாக்க
துள்ளியோடி எங்கூடத் துணையாக வந்தவரே

நிழலோட அரும வெயிலுலதான் தெரியுமுன்னு
பலமுறைநீ சொன்னப்போ படிக்கலயே நான்உன்ன
நீயில்லா நேரத்துல நிழல்கூட சொல்லிடுதே
ஆத்தாவே தாத்தாவே உன்னோட பெருமைகள
வருவாயா? வரந்தருவாயா? ஏக்கத்தோடு உம்பேரன்



செந்தமிழ்ச்சுடர்
அ.செலஸ்டின் மகிமை ராஜ்
வேம்பார்


 

No comments:

Post a Comment