என்னதவம் செய்தேனோ.!
பள்ளிக்காலம் முடிந்து பாரினில் எழுந்து/
தெள்ளிய சிந்தனையால் திசைதேடிச் சென்று/
முள்ளான பாதைகளில் முட்டியினால் தவழ்ந்து/
வெள்ளிடை மலையென வியனுலகில் சிறந்திடவே/
கல்வியைக் கரம்பற்றி கரையிலா நூல்கற்று/
வல்வினை ஓட்டியே வலியதோர் நிலைநாட்டி/
அல்லல்கள் நீக்கிடவே அறிவினைக் கைக்கொண்டு/
நல்லதோர் நிலைகண்ட நலவாழ்வு மிகவுண்டு/
தீயினிலே மிகவுழன்று தேநீரும் விற்றலைந்து/
தீயணைப்புத் துறைதனிலே தீநாவின் சுற்றளந்து/
தீயினாற் சுட்டிடா திறமிகு சொல்வன்மை/
சேயிடை கூறிடவே சீர்மிகு ஆசானானேன்/
குடிசையிலே பிறந்து கோபுரமாய் நிமிர்ந்து/
விடியுநிலை தெரிந்து வியனுலகில் சிறந்து/
துடிப்பாக எழுந்திட்டு துயரங்கள் மறந்து/
பிடிப்பிலாது எழுந்திட என்னதவம் செய்தேனோ.?/
செந்தமிழ்ச்சுடர்
அ.செலஸ்டின் மகிமை ராஜ்
வேம்பார்

No comments:
Post a Comment