Sunday, 25 September 2022

காந்தக் குரலோனுக்குக் கவிதாஞ்சலி


என்னோடு பாட்டுப் பாடுங்கள்

காந்தக் குரலினால் கேட்போரை ஈர்த்து
சாந்தம் மிகப்பெற்று சங்கதியும் சேர்த்து
தீந்தமிழ் சொல்லிலே திகட்டா இசைகோத்து
மாந்திட வழிகூட்டிய மன்னவரே மணியரே

அம்மாவின் அன்பையும் அரவணைக்கும் பண்பையும்
இம்மாநிலம் உரைத்ததோ இனியநும் குரலிசையே
எம்மாந்தர் கேட்டாலும் ஏந்திநின்று இதயத்திலே
கும்மாளம் இடச்செய்யும் குதூகலக் குரலோனே

இசைக்கு மயங்கார் இவ்வுலகில் இல்லையென
இசைகூட்டிய சொல்வளம் இனியவனே உனதன்றோ!
திசைமாறிய பறவைக்கும் தித்தித்த உனதுகுரல்
பசைகூட்டி வாழ்வினிலே பற்றுகொள்ளச் செய்ததுவே

தேனினும் இனியநல் திருவாசகம் அனையவே
வானினும் உயர்ந்தோங்கிய வனப்புமிகு இசையாலே
வையக்கத்துள் வாழ்ந்துவரும் வனப்புமிகு வான்நிலவே
வையகம் உள்ளவரை வாழ்வாங்கு வாழியவே


செந்தமிழ்ச்சுடர்
அ.செலஸ்டின் மகிமை ராஜ்
வேம்பார்


 

No comments:

Post a Comment