Thursday, 22 September 2022

சங்கத்தமிழ்ச் செல்வம்


*சங்கத் தமிழ்ச் செல்வம்*

வங்கக் கடலின் வனப்பிடை உதித்து/
 சிங்கம் அனையவே சீர்பெற்றுச் சிறந்து/
தங்கம் போலவே தணலிலும் உறைந்து/
எங்கும் நிறைபவள் எங்கள் தமிழ்த்தாய்/

முச்சங்கம் பிறந்து மூவேந்தரிடை வளர்ந்து/
எச்சங்கத் துள்ளும் எதிர்வாதம் புரிந்து/
கச்சிதமாய் எழுந்து காசினியில் நிமிர்ந்து/
 உச்சிநின்று ஒளிகூட்டி உலகாளும் சங்கத்தமிழ்/

பதிற்றுப் பத்துடன் புறநானூறாய்ப் புறங்கொண்டு/
அதிசிறந்த நற்றிணையொடு ஐந்துநூல் அகங்கொண்டு/
பதிசிறந்த சேயோனுடன் பரிபாடலில் இருபொருளும்/
கதியாகப் பெற்றதே கவின்மிகு எட்டுத்தொகை/

ஆற்றொணா மாந்தரை ஆற்றிடவே எழுந்திட்ட/
ஆற்றுப்படை நூல்களொடு ஐயிரண்டு பாட்டாகத்/
தோற்றமுடை பத்துப்பாட்டாய்த்  திக்கெட்டும் புகழ்கொண்ட/
ஏற்றமுடை எங்கள்தமிழ் என்றென்றும் வாழியவே! 


செந்தமிழ்ச்சுடர்
அ.செலஸ்டின் மகிமை ராஜ்
வேம்பார்


 

No comments:

Post a Comment