தித்திக்கும் தெரிவை
பெண்ணின் பருவத்துள் ஆறாம் பருவமாய்/
கண்ணின் இமைபோலக் காக்கும் பருவமாய்/
எண்ணியன ஈடேறும் இனிய பருவமாய்/
பண்ணினை மீட்டிடும் பருவமே தெரிவை/
இல்லறம் நுழைந்திடும் இணையிலாப் பருவமாய்/
நல்லறம் நோக்கிய நலமிகு பருவமாய்/
இல்வாழ்வில் விருந்தோம்பலில் இனிமை சேர்த்து/
எல்லோரையும் மகிழ்விக்கும் ஈடிலாப் பருவம்/
தாயாய் நின்றே தரணியைத் தாங்கிடவும்/
தாரமாய் நின்று தளர்வினைப் போக்கிடவும்/
சேயினை ஈன்றவள் சீர்பெறச் செய்திடவும்/
சோர்வினைப் போக்கியே சுகந்தரும் தெரிவை/
அன்பும் அறனும் உடையதோர் இல்வாழ்வைப்/
பண்பும் பயனுமாய்ப் பொலிவுறச் செய்துநல்/
இன்பம் பொங்கிடும் இல்லறத்தின் இளமையாம்/
தெரிவையைப் பாடுவோம் புகழ்மாலை சூடுவோம்/
செந்தமிழ்ச்சுடர்
அ.செலஸ்டின் மகிமை ராஜ்
வேம்பார்

No comments:
Post a Comment