காணொளியும் கவிவரியும்
வறுமை ஓட்டி வளமை கூட்டுவோம்
உண்டிதனைக் கொடுத்தோர் உயிரினைக் கொடுத்தோராய்/
கண்டித்துக் கூறிநின்ற கடந்திட்ட காலத்தவராய்/
பண்டியை நிரப்பிடப் பாடுபட்ட நாட்கள்போய்/
கண்டவிடம் வீசிநிற்கும் கயவர்களை என்செய்ய.../
எலும்புடன் தோலொட்டி எழவியலா மாந்தர்களாய்/
உலுக்கிடும் நிலைதந்து உருக்குலைக்கச் செய்தவராய்/
பலுகியே பெருகிடவும் பங்கிடவும் உணவில்லா/
வலுவற்ற மாந்தர்களும் வாழ்கின்ற உலகமிது/
வலியவராய் உடல்வளர்க்கும் வல்லவர்கள் ஒருபக்கம்/
மெலியவராய் உருக்குலைந்து மடிபவர்கள் மறுபக்கம்/
பலியிடும் நிலைமீட்டு பசியினைப் போக்கிடவே/
புலியெனப் புறப்படுவீர் புரட்சிசெய் தோழர்களே/
இருப்பவர் கொடுத்து இல்லாரை நிரப்பாவிடினும்/
இருப்பதை வீணாக்காது இனியதோர் நிலைகொண்டால்/
பொருப்பாய் மண்ணிலே பீடுறவே நிமிர்ந்து/
வறுமையை ஓட்டலாம் வளமையைக் கூட்டலாம்/
செந்தமிழ்ச்சுடர்
அ.செலஸ்டின் மகிமை ராஜ்
வேம்பார்
No comments:
Post a Comment