Thursday, 15 September 2022

வறுமை ஓட்டி வளமை கூட்டுவோம்

 காணொளியும் கவிவரியும் 


வறுமை ஓட்டி வளமை கூட்டுவோம்


உண்டிதனைக் கொடுத்தோர் உயிரினைக் கொடுத்தோராய்/ 

கண்டித்துக் கூறிநின்ற கடந்திட்ட காலத்தவராய்/ 

பண்டியை நிரப்பிடப் பாடுபட்ட நாட்கள்போய்/

கண்டவிடம் வீசிநிற்கும் கயவர்களை என்செய்ய.../


எலும்புடன் தோலொட்டி எழவியலா மாந்தர்களாய்/ 

உலுக்கிடும் நிலைதந்து உருக்குலைக்கச் செய்தவராய்/

பலுகியே பெருகிடவும் பங்கிடவும் உணவில்லா/

வலுவற்ற மாந்தர்களும் வாழ்கின்ற உலகமிது/


வலியவராய் உடல்வளர்க்கும் வல்லவர்கள் ஒருபக்கம்/

மெலியவராய் உருக்குலைந்து மடிபவர்கள் மறுபக்கம்/

பலியிடும் நிலைமீட்டு பசியினைப்  போக்கிடவே/

புலியெனப் புறப்படுவீர் புரட்சிசெய் தோழர்களே/


இருப்பவர் கொடுத்து இல்லாரை நிரப்பாவிடினும்/ 

இருப்பதை வீணாக்காது இனியதோர் நிலைகொண்டால்/

பொருப்பாய் மண்ணிலே பீடுறவே நிமிர்ந்து/ 

வறுமையை ஓட்டலாம் வளமையைக் கூட்டலாம்/


செந்தமிழ்ச்சுடர்

அ.செலஸ்டின் மகிமை ராஜ்

வேம்பார்

No comments:

Post a Comment