கடிதினில் நகரும் காலச் சக்கரம்
திரைகடல் சூழ்புவியில் திக்கெட்டும் உலவிட/
நரைகூடும் நாள்மட்டும் நிற்காது விரைந்திட/
மரைபோலத் துள்ளியே மண்ணிலே ஓடிட/
தரைமீதில் விழிகூட்டி வழிகாட்டும் கடிகாரம்/
வரையிலா வரங்களால் வாழ்வெலாம் நிறைந்திட/
கரையிலா உரங்கூட்டி கறையிலாது செறிந்திட/
புரையிலாக் கண்போலப் புவிதனில் தெளிவுடனே/
விரைந்தேகி அணிசூட விதிகூட்டும் கடிகாரம்/
காலத்தைத் திட்டமிட்டு காவியம் படைத்திட/
ஞாலத்தைக் கட்டமைக்க ஞானமும் பெற்றிட/
ஆலத்தின் விழுதாகவே ஆற்றலும் அடைந்திட/
தூலத்தின் உயரம்போல் துணைசெய்யும் கடிகாரம்/
மணியுடன் நில்லாது மிகச்சிறு நொடிகூட/
பணியுடன் செறிவூட்டி பீடுபல அணிந்திட/
துணிவுடன் எழுந்திட்டு தூணாக நிமிர்ந்திட/
அணிசெய்து வாழ்வினில் அழகூட்ட வருகவே/
செந்தமிழ்ச்சுடர்
அ.செலஸ்டின் மகிமை ராஜ்
வேம்பார்

No comments:
Post a Comment