Wednesday, 28 September 2022
தாத்தாவே ஆத்தாவே உனக்காக...
Tuesday, 27 September 2022
லளழகர சிறப்பு குறும்பா
Monday, 26 September 2022
தெரிவை என்னும் பருவம்(பெண்)
தித்திக்கும் தெரிவை
பெண்ணின் பருவத்துள் ஆறாம் பருவமாய்/
கண்ணின் இமைபோலக் காக்கும் பருவமாய்/
எண்ணியன ஈடேறும் இனிய பருவமாய்/
பண்ணினை மீட்டிடும் பருவமே தெரிவை/
இல்லறம் நுழைந்திடும் இணையிலாப் பருவமாய்/
நல்லறம் நோக்கிய நலமிகு பருவமாய்/
இல்வாழ்வில் விருந்தோம்பலில் இனிமை சேர்த்து/
எல்லோரையும் மகிழ்விக்கும் ஈடிலாப் பருவம்/
தாயாய் நின்றே தரணியைத் தாங்கிடவும்/
தாரமாய் நின்று தளர்வினைப் போக்கிடவும்/
சேயினை ஈன்றவள் சீர்பெறச் செய்திடவும்/
சோர்வினைப் போக்கியே சுகந்தரும் தெரிவை/
அன்பும் அறனும் உடையதோர் இல்வாழ்வைப்/
பண்பும் பயனுமாய்ப் பொலிவுறச் செய்துநல்/
இன்பம் பொங்கிடும் இல்லறத்தின் இளமையாம்/
தெரிவையைப் பாடுவோம் புகழ்மாலை சூடுவோம்/
செந்தமிழ்ச்சுடர்
அ.செலஸ்டின் மகிமை ராஜ்
வேம்பார்
Sunday, 25 September 2022
ஏழையின் சிரிப்பினில்...
காந்தக் குரலோனுக்குக் கவிதாஞ்சலி
Saturday, 24 September 2022
என்ன தவம் செய்தேனோ
Friday, 23 September 2022
நீடுதுயில் நீக்கவந்த நிலா
நீடுதுயில் நீக்கவந்த நிலா
பாட்டுக்கொரு புலவனாய் பாரினில் உதித்து/
ஏட்டுக்குநற் கவிஞனாய் எழிலாய் எழுந்து/
நாட்டுக்கொரு தலைவனாய் நிமிர்ந்தே சிறந்து/
நாட்டினார் புகழ்க்கொடி நற்றமிழால் நல்லபடி/
அறியாமை நீங்கிடவே ஆற்றல்மிகு சொல்லோவியம்/
செறிவாகத் தந்தவரே சீற்றமுடன் உரைத்தவரே/
குறிபார்த்துப் பெண்ணினத்தை கூட்டுக்குள் அடைத்தோரை/
வெறிகொண்டு விரட்டிடவே வண்டமிழ் பகர்ந்தவரே/
தளைதனில் சிக்கிநின்ற தீந்தமிழின் வீரியத்தைத்/
துளைமீண்டு தென்றலாய்த் தேனூறும் இசையாக/
முளைத்திட முட்டிநிற்கும் முற்றியதோர் விதையாக/
விளைந்தநற் புதுக்கவியாய் வியனுலகில் படைத்தவரே/
எண்ணத்தைக் காவியமாய் ஏத்திடும் எல்லோரையும்/
திண்ணிய நெஞ்சுடனே தீரமிக்க கவிவடிக்கப்/
பண்ணிய பாவலனே பைந்தமிழ்ச் சூரியனே/
எண்ணிலாக் கவிகளின்று எழுதுவதே உன்ஒளியில்... /
செந்தமிழ்ச்சுடர்
அ.செலஸ்டின் மகிமை ராஜ்
வேம்பார்







