கண்ணாடி அல்ல ... கண்ணடை
செந்தமிழ்த்தேன்
🍇🍇🍇🍇🍇🍇🍇
துளி : 63
தமிழன்பர்களே,
வணக்கம்.
மூக்குக்கண்ணாடி
'Spectacles' என்பதற்கு 'மூக்குக்கண்ணாடி' என்பதுதான் முறையான தமிழ்ச்சொல்லா?
கண்ணுக்கு உதவும் கண்ணாடிக்கு, மூக்கு எதற்கு முன்னாடி?
மூக்கு மட்டுமா முட்டுக் கொடுக்கிறது?.காதுகளும் தானே கைகொடுக்கின்றன?
என்றால்,செவிக்கண்ணாடி என்றும் செப்பலாமன்றோ?
மூக்குக்கண்ணாடியா?
செவிக்கண்ணாடியா?
செவ்வையான தமிழாக்கம் எது?
அதற்கு முன்னால்,
கண்ணாடி குறித்த, சொல்லாண்மை தேடிச் சற்றுப் பின்னாடி போவோம்.
உருவங்காட்டும் பொருளைப் பழந்தமிழர் 'ஆடி' என்றழைத்தனர்.
'கையும் காலும் தூக்கத் தூக்கும் ஆடிப் பாவை போல'- சங்க இலக்கியம்.
வள்ளுவர் காலத்தார், ஆடியைப் 'பளிங்கு' எனவும் வழங்கினர்.
'அடுத்தது காட்டும் பளிங்குபோல்' - திருக்குறள்.
ஆடிக்கும்,பளிங்குக்கும்
அடுத்து வந்தசொல் கண்ணாடி.
பளிச்சிடும் கண்ணாடியையும் பருகிடும் குவளையையும் 'Glass' என்றது ஆங்கிலம்.
அந்தக் கண்ணாடியால் செய்யப்பட்ட குவளையை 'கண்ணாடி கிளாஸ்' என்பது தமிங்கிலம்.
பொதுவான கண்ணாடி 'Glass'.
உருவங்காட்டுவது 'Mirror'.
கண்ணுக்கு உதவுவது 'Spectacles'.
இந்நுட்பமறிந்த தமிழனுக்கு,பேச்சுவழக்கில் மூன்றுமே கண்ணாடிதான்.
ஆனாலும்,மூன்றாம் கண்ணாடியை மூக்குக்கண்ணாடி என்கின்றோம்.
அது முழுமையான பொருளை உணர்த்துகின்றதா என்பதே இந்தத்தேடல்.
மூக்குக்கண்ணாடிக்கு முறையான தமிழ்ச்சொல் முத்தமிழில் இருந்தது.
சேரன் பிரிந்தபோது அது கேரளம் சென்றுவிட்டது.
பொருட்செறிவுள்ள அருந்தமிழ்ச் சொல் அது.
அதுதான், 'கண்ணடை' ( കണ്ണട ) என்பது.
அடை என்பதற்கு அரும்பொருள்கள் பலவுண்டு.
செம்மையாக இல்லாத ஒன்றைச் செம்மையாக்குதற்காகக் கொடுக்கப்படும் உதவிப் பொருளையும் 'அடை' என்பர்.
கண்களில் காட்சித்திறன் தளரும்போது,அதைச் செம்மையாக்க, கண்களுக்கும் ஓர் அடைகொடுத்தல் வேண்டும். அந்த அடைதான் கண்ணாடி.
கண்ணுக்கு அடையாக உதவுகின்ற கண்ணாடியைக் 'கண்ணடை' என்றனர் கன்னித்தமிழர்.
பொருட்செறிவுடைய பொருத்தமான இந்தச் செந்தமிழ்ச்சொல், இன்று நந்தமிழ் நாட்டு வழக்கிலில்லை.
ஆனால்,மலையாள நாட்டார் இம்மாத்தமிழ்ச் சொல்லை மறந்துவிடாமல், மூக்குக்கண்ணாடியுடன் போற்றி வருகின்றனர்.
'மூக்குக்கண்ணாடி' என்று எட்டெழுத்துகளால் நீட்டி ஒலித்திடக் கிட்டாத சொல்லின்பம்,
'கண்ணடை' என நான்கெழுத்துகளால் குறுக்கி ஒலித்திடக் கிட்டுகிறதன்றோ!
நன்றி.
அன்புடன்,
மனோ.சேவியர்,
மணப்பாடு,
24.04.2020.
செந்தமிழ்த்தேன்
🍇🍇🍇🍇🍇🍇🍇
துளி : 63
தமிழன்பர்களே,
வணக்கம்.
மூக்குக்கண்ணாடி
'Spectacles' என்பதற்கு 'மூக்குக்கண்ணாடி' என்பதுதான் முறையான தமிழ்ச்சொல்லா?
கண்ணுக்கு உதவும் கண்ணாடிக்கு, மூக்கு எதற்கு முன்னாடி?
மூக்கு மட்டுமா முட்டுக் கொடுக்கிறது?.காதுகளும் தானே கைகொடுக்கின்றன?
என்றால்,செவிக்கண்ணாடி என்றும் செப்பலாமன்றோ?
மூக்குக்கண்ணாடியா?
செவிக்கண்ணாடியா?
செவ்வையான தமிழாக்கம் எது?
அதற்கு முன்னால்,
கண்ணாடி குறித்த, சொல்லாண்மை தேடிச் சற்றுப் பின்னாடி போவோம்.
உருவங்காட்டும் பொருளைப் பழந்தமிழர் 'ஆடி' என்றழைத்தனர்.
'கையும் காலும் தூக்கத் தூக்கும் ஆடிப் பாவை போல'- சங்க இலக்கியம்.
வள்ளுவர் காலத்தார், ஆடியைப் 'பளிங்கு' எனவும் வழங்கினர்.
'அடுத்தது காட்டும் பளிங்குபோல்' - திருக்குறள்.
ஆடிக்கும்,பளிங்குக்கும்
அடுத்து வந்தசொல் கண்ணாடி.
பளிச்சிடும் கண்ணாடியையும் பருகிடும் குவளையையும் 'Glass' என்றது ஆங்கிலம்.
அந்தக் கண்ணாடியால் செய்யப்பட்ட குவளையை 'கண்ணாடி கிளாஸ்' என்பது தமிங்கிலம்.
பொதுவான கண்ணாடி 'Glass'.
உருவங்காட்டுவது 'Mirror'.
கண்ணுக்கு உதவுவது 'Spectacles'.
இந்நுட்பமறிந்த தமிழனுக்கு,பேச்சுவழக்கில் மூன்றுமே கண்ணாடிதான்.
ஆனாலும்,மூன்றாம் கண்ணாடியை மூக்குக்கண்ணாடி என்கின்றோம்.
அது முழுமையான பொருளை உணர்த்துகின்றதா என்பதே இந்தத்தேடல்.
மூக்குக்கண்ணாடிக்கு முறையான தமிழ்ச்சொல் முத்தமிழில் இருந்தது.
சேரன் பிரிந்தபோது அது கேரளம் சென்றுவிட்டது.
பொருட்செறிவுள்ள அருந்தமிழ்ச் சொல் அது.
அதுதான், 'கண்ணடை' ( കണ്ണട ) என்பது.
அடை என்பதற்கு அரும்பொருள்கள் பலவுண்டு.
செம்மையாக இல்லாத ஒன்றைச் செம்மையாக்குதற்காகக் கொடுக்கப்படும் உதவிப் பொருளையும் 'அடை' என்பர்.
கண்களில் காட்சித்திறன் தளரும்போது,அதைச் செம்மையாக்க, கண்களுக்கும் ஓர் அடைகொடுத்தல் வேண்டும். அந்த அடைதான் கண்ணாடி.
கண்ணுக்கு அடையாக உதவுகின்ற கண்ணாடியைக் 'கண்ணடை' என்றனர் கன்னித்தமிழர்.
பொருட்செறிவுடைய பொருத்தமான இந்தச் செந்தமிழ்ச்சொல், இன்று நந்தமிழ் நாட்டு வழக்கிலில்லை.
ஆனால்,மலையாள நாட்டார் இம்மாத்தமிழ்ச் சொல்லை மறந்துவிடாமல், மூக்குக்கண்ணாடியுடன் போற்றி வருகின்றனர்.
'மூக்குக்கண்ணாடி' என்று எட்டெழுத்துகளால் நீட்டி ஒலித்திடக் கிட்டாத சொல்லின்பம்,
'கண்ணடை' என நான்கெழுத்துகளால் குறுக்கி ஒலித்திடக் கிட்டுகிறதன்றோ!
நன்றி.
அன்புடன்,
மனோ.சேவியர்,
மணப்பாடு,
24.04.2020.
No comments:
Post a Comment