Friday, 8 May 2020

மூன்றாம் உலகப் போர் - அனுபவம்

மூன்றாம் உலகப்போர்
கவிப்பேரரசு - வைரமுத்து

இயற்கையோடு மனிதர்கள் நடத்தும் போர்...
நிலத்தோடு, நீரோடு, காற்றோடு நடத்தும் போர்...
கல்லில் முட்டினால் வலி யாருக்கு...?
கல்லுக்கு இல்லையே...
அதுபோலத்தான் #இயற்கையும்...
இயற்கையோடு இணைந்து வாழ்ந்த விவசாயி தற்கொலைகளுக்குக் காரணம்

#புவிவெப்பமாதல்
#தாராளமயமாக்கல்
#தனியார்மயமாக்கல்

நம்ப முடிகிறதா... ?

விவசாயிகளின் வாழ்வை அவலங்களை அழகுற வடித்து, முன்மாதிரி கிராமம் உருவாக்கி, இந்தியாவின் முதுகெலும்பை(கிராமம்)  நிமிரச் செய்து, எதிர்கால விவசாயி, விவசாயம் எப்படி இருக்கவேண்டுமென இலட்சியக் கருத்துகளை விதைத்துள்ளார் #கவிப்பேரரசு_வைரமுத்து_அவர்கள்...

கருத்தமாயி-சிட்டம்மா தம்பதியினரின் அட்டணம்பட்டி கிராமத்து விவசாய வாழ்க்கை... மகன் முத்துமணியின் கேடுகெட்ட வாழ்க்கை...  மகன் சின்னப்பாண்டியின் (விவசாயக் கல்லூரி மாணவன்) முன்மாதிரி வாழ்க்கை...  அவனுக்கு தூண்டுகோலாக அமரிக்கப்பெண் எமிலி, சப்பானிய இளைஞன் இஷிமுரா..,  கிராமத்து வாழ்க்கையூடே அகில உலகையும் அளந்துகாட்டுகிறார் கவிப்பேரரசு...

பூமிய சாமின்னு சொல்லும் நாமதான் ரசாயன உரம் போட்டு சாமியவே கொல்லுறோம்.. .
வெடிகுண்டு தயாரிப்பில் மிச்சப்பட்ட உப்புகளை கொட்டுவதற்கு உருவாக்கப்பட்ட மண்சந்தை முதல் மண்புழு உரம் தயாரித்தலில் ஒவ்வொரு படிநிலையும் மிக நேர்த்தியாக ...

விவசாயி, விவசாயத்தை நேசிப்போர் அனைவருக்கும் இந்நூல் ஓர் கலைக் களஞ்சியம்...

முதல் 150 பக்கங்கள் படிக்க 7 நாட்களும் அடுத்த 250 பக்கங்கள் படிக்க ஒருநாள் முழுமையும்... படிக்கப்படிக்க அவ்வளவு ஈர்ப்பு...

சொந்த நூல்கள் படிக்கையில் இருக்கும் வேகத்தைவிட, இரவல்நூல் அதிக வேகமெடுக்கிறது...

இரவல் தந்த அண்ணன் #அ.தி.தாமஸ் அவர்களுக்கு நன்றி...

நீங்களும் வாய்ப்பு இருந்தால் நிச்சயம் ஒருமுறையாவது #மூன்றாம்_உலகப்_போர் படியுங்கள்...
மீண்டும் படிக்கத் தூண்டும்...

ஓர் #வெற்றிப்படம் பார்த்த நிறைவு...

3 comments: