*ஊக்கமது கைவிடேல்*
ஆயிரம் தோற்ற அபூர்வ மனிதர்/
பாயிரம் போற்றப் படைத்த புனிதர்/
சாய்தல் கண்டு சோர்ந்து போயின்/
ஓய்தல் ஒன்றே உறையுள் ஆகும்/
உள்ளிருந் துடைபடா உலகத் துயிர்கள்/
வெள்ளிடை மலையாய் வெற்றி காணா/
தெள்ளிய சிந்தனையும் தீர்க்க முடிவுமே/
துள்ளிய வெற்றியைத் துவளாது தந்திடும்/
கடைசி அடிக்குமுன் கடலளவு பட்டாலும்/
படைப்பின் ஓவியமாய் பாங்குடை சிலைவாரா/
துடைத்து விடைத்தெழு துளியும் பலனாகும்/
மடைஉடை வெள்ளமாய் மங்காப் புகழ்சேரும்/
முயற்சிகை விட்டாலும் முயற்சி கைவிடாமலே/
பயிற்சியும் பாங்குடை புதியநல் முயற்சியோடே/
அயர்ச்சியைப் போக்கினால் அகிலமே ஆளலாம்/
தயக்கமதை நீக்கியே தரணியும் வெல்லலாம்/
செந்தமிழ்ச்சுடர் அ.செலஸ்டின் மகிமை ராஜ்
வேம்பார்









