Thursday, 19 May 2022

மும்மொழித் தமிழே

 

*மும்மொழித் தமிழே*

முத்தமிழாய் இயல் இசை நாடகமென/
முக்கனியாய் மா பலா வாழையென/
முப்பாலாய் அறம் பொருள் இன்பமென/
முக்காலமாய் நேற்று இன்று நாளையென/

மும்மொழியாய் தனி தொடர் பொதுமொழியென /
எம்மொழியும் பெறா எழிலைப் பெற்றவளே/
தொகைமொழியுள் நின்றே தொன்மை காத்தவளே/
பகைமொழியின் முன்னே பரிவை வளர்த்தவளே/

முந்நீர் கடந்தும் முகிழ்த்தே நின்று/
செந்நீர் சொறிந்தும் செம்மை காத்து/
கண்ணீர்  களைந்து காவியம் படைத்து/
திண்ணிய நெஞ்சுடன் திசைகாட்டிய தீந்தமிழே/

ஆண்டுகள் பல்லாயிரம் அற்புதமாய்க் கடந்து/
பாண்டியன் மகளாய்ப்  பாங்குற நடந்து/
ஆண்டவன் நாவிலும் அமுதமாய்  உறைந்து/
தாண்டவ மாடிடும் தனித்தமிழே வாழியவே/

செந்தமிழ்ச்சுடர்
அ.செலஸ்டின் மகிமை ராஜ்
வேம்பார்

Monday, 9 May 2022

பெண்களே,விழிப்போடு இருங்கள்...

 *👍🏽காவல்துறையின் எச்சரிக்கை💪🏼*


 இந்திய தண்டனைச் சட்டம் 233ன் படி



ஒரு பெண் ஏதாவதொரு சூழ்நிலையில்  கயவர்களிடம் மாட்டிக் கொண்டால்   அவள் பாலியல் வன்கொடுமைக்கோ அல்லது வேறுவிதமான துன்பங்களுக்கோ,ஆட்பட நேரலாம், அதற்கான வாய்ப்புக்களும் அதிகம்...

 

தன்னைத் தாக்கியவரைத் திருப்பித் தாக்கி மரணம் ஏற்படுத்த அப்பெண்ணுக்கு உரிமை உண்டு, அப்படிச் செய்யும் பட்சத்தில், அச் செயல் கொலைக் குற்றமாகாது...


இக்கட்டான இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் சமயோசிதமாகத் தப்பிக்க சிலவழிகள்...


 1) இரவு வெகுநேரம் உயரமான அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள லிப்ட்டில்  ஒரு பெண் அந்நிய ஆணுடன் தனியாகச் செல்ல நேர்ந்தால் என்ன செய்ய வேண்டும் ?


  *நிபுணர்கள் கூறுகிறார்கள்*


நீங்கள் பல தளங்களைத் தாண்டி உங்கள் தளத்தை அடைய வேண்டும் , நீங்கள் சேருமிடம் வரை உள்ள அனைத்து தளங்களிலும் நின்று செல்லுமாறு அனைத்து பட்டன்களையும்  அழுத்தவும்.

ஒவ்வொரு தளத்திலும் நின்று செல்லும் லிஃப்டில் யாரும் உங்களைத் தாக்கத் துணிவதில்லை ...


2)  நீங்கள் வீட்டில் தனியாக இருக்கும் போது அந்நியன் உங்களைத் தாக்க முயன்றால் என்ன செய்வது ...


*நிபுணர்கள் கூறுகிறார்கள்*

 சமையலறைக்கு ஓடுங்கள்,

மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், கத்தி, தட்டு, இவை எங்கு இருக்கும்  என்று உங்களுக்குத் தெரியும்,

இவை அனைத்தையும் கொடிய ஆயுதங்களாக மாற்றலாம்,

வேறு ஒன்றுமே இல்லை என்றாலும், தட்டுக்களையும் பாத்திரங்களையும் வீசத் தொடங்குங்கள்.


 அவர்களை எதிர்த்து கூச்சல் போடுவதால் உண்டாகும் சத்தம் ஒரு கொடுமைக்காரனுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை தரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.... 


அவன் பிடிபட விரும்பமாட்டான் என்பதால் அவன் தப்பிக்கவே முயல்வான்...


3) இரவில் ஆட்டோ அல்லது டாக்ஸியில் செல்லும்போது:


  *நிபுணர்கள் கூறுகிறார்கள்* 


 இரவில் ஆட்டோவில் ஏறும் முன், முதலில் அதன் பதிவு எண்ணை செல்லில் பதிவு செய்தபின்

 உங்கள் குடும்பத்தினர் அல்லது நண்பரை அழைக்கவும்,

 டிரைவருக்குப் புரியும்படி  வீட்டாரிடம் விவரங்களை கூறவும்....

 உங்கள் அழைப்பிற்கு யாரும் பதிலளிக்காவிட்டாலும், நீங்கள் உரையாடலில் இருப்பது போல் பாசாங்கு செய்யுங்கள் ... தம்மைப் பற்றிய விவரங்கள் அனைத்தும்  உங்களிடம் இருப்பதை ஓட்டுநர் அறிந்துகொள்வார்,

 ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் கடும் சிரமத்திற்கு ஆளாக நேரிடும் என்பதை உணரும் டிரைவர்

உங்களைப் பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்துச் செல்வது இப்போது அவர் பொறுப்பு என்று உணர்ந்து தாக்கும் எண்ணத்தை கைவிட்டு இப்போது உங்கள் உண்மையான பாதுகாவலராக மாறிவிடுவார்.


4)  ஓட்டுனர் பாதையை மாற்றினாலோ, அல்லது

 நீங்கள் ஆபத்து மண்டலத்திற்குள் நுழைவது போல் உணர்ந்தாலோ என்ன செய்வது ...


*நிபுணர்கள் கூறுகிறார்கள்*


உங்கள் பையின் கைப்பிடி அல்லது துப்பட்டாவில் அவரின் கழுத்தில் சுற்றி அவரைப் பின்னால் இழுக்கவும்.

சில நொடிகளில், அவர் மூச்சுத் திணறல் மற்றும் உதவியற்றவராக உணருவார் ...

உங்களிடம் பை அல்லது சால்வை இல்லையென்றால், அவரது சட்டைக் காலரை  பிடித்து இழுக்கவும்.  அவரது சட்டையின் மேல் உள்ள பட்டனும் அவன் கழுத்தை நெறிப்பதால், அவர் நிலை தடுமாறும் வேளையில் நீங்கள் தப்பித்து விடலாம்.


5) ஒரு அந்நியன் இரவில் உங்களைப் பின்தொடர்ந்தால் ...?


*நிபுணர்கள் கூறுகிறார்கள்*


அருகாமையில் இருக்கும் கடை அல்லது வீட்டிற்குள் நுழைந்து உங்கள் நெருக்கடியை விளக்குங்கள்,

இரவில் கடைகள் திறக்கப்படாவிட்டால்,

 ஒரு ஏடிஎம் மையத்திற்குள் செல்லுங்கள்... ஏடிஎம் ல் எப்பொழுதும் க்ளோஸ் சர்க்யூட் கேமரா இருக்கும்;

அடையாளம் கண்டுகொள்வோம், என்ற பயத்தில்  உங்களைத் தாக்கத் துணியமாட்டார்கள்...


 *உங்கள் கைப்பையில் எப்போதும் ஒரு விசில் வைத்திருங்கள் , ஆபத்து சமயத்தில் அதை ஊதும் போது சைகலாஜிகலாக  விசில் சத்தத்திற்கு யாருமே பயப்படுவார்கள்...*

 *“அனைத்திற்கும் மேலாக"*


*மனதளவில் விழிப்புடன் இருப்பது முக்கியம்*


*உங்களிடம் இருக்கும் மிகப்பெரிய ஆயுதம் உங்களின் தைரியம்*


சமூக மற்றும் தார்மீக நோக்கத்திற்காகவும், பெண்களின் பாதுகாப்பிற்காகவும் நாம் செய்யக்கூடியது, இத்தகவலைப்  பகிர்வது மட்டுமே ...


🌹நட்புக்களே, இதை நம்  தாய்மார்கள், சகோதரிகள், மனைவி, மற்றும் தோழிகளுக்கும் தெரியப்படுத்துங்கள்...🙏🏼